Trending News

வழமைக்கு திரும்பும் புகையிரத சேவை

(UTV|COLOMBO)-மலைநாட்டு புகையிரத சேவை இன்று மாலை வழமைக்கு திரும்பும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

நேற்று இரவு பேராதனை மற்றும் பிலிமதலாவ பிரதேசங்களுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் தெலி் இருந்த எரிபொருள் தாங்கிய பெட்டி ஒன்று கவிழ்ந்துள்ளது.

எருபொருள் தங்கிய பெட்டியை புகையிரத தண்டவாளத்துடன் இணைப்பதற்காக கொழும்பில் இருந்து இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், இன்று மாலையாகும் போது புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம் என்று புகையிரத மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

புகையிரதம் தடம்புரண்ட காரணத்தால் இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை வரை பயணிக்க இருந்த பொடி மெனிக்கே புகையிரத சேவையையும் இரத்து செய்ததாக அவர் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சைபர் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

Mohamed Dilsad

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது

Mohamed Dilsad

S. B. Dissanayake and Dilan Perera join SLPP

Mohamed Dilsad

Leave a Comment