Trending News

கண்டியில் இடம்பெற்ற கோர விபத்தில் 25 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – கண்டி கெடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுகன்னாவையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தொன்று, யஹதென்னவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தின் பின்னால் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் கண்டி மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெறும் போது இரண்டு பேருந்துகளிலும் அதிகளவு பயணிகள் இருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் கண்டி காவற்துறை மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளது.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார்

Mohamed Dilsad

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நேற்றிரவு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

Sri Lanka confident of future relations with US

Mohamed Dilsad

Leave a Comment