Trending News

கண்டியில் இடம்பெற்ற கோர விபத்தில் 25 பேர் காயம்

(UDHAYAM, COLOMBO) – கண்டி கெடம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுகன்னாவையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தொன்று, யஹதென்னவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தின் பின்னால் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் கண்டி மருத்துவனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெறும் போது இரண்டு பேருந்துகளிலும் அதிகளவு பயணிகள் இருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் கண்டி காவற்துறை மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளது.

Related posts

பாராளுமன்றத்தை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்

Mohamed Dilsad

ஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்குவது அவசியம்

Mohamed Dilsad

පහේ ශිෂ්‍යත්ව විභාගයේ පිළිතුරු පත්‍ර ඇගයීම තාවකාලිකව අත්හිටුවයි.

Editor O

Leave a Comment