Trending News

நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே முக்கியம்

(UTV|COLOMBO)-அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக கவனம் செலுத்துவதை விட நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் பேன்ற விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட அரச சேவையில் உள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் ஊடாக மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கை தரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அனைவரினதும் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பு அவசியம்.

இதற்காக அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் தங்களது பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

Medical staff and policeman among four dead in Chicago hospital shooting

Mohamed Dilsad

எதிர்வரும் புதன்கிழமை எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

Meethotamulla tragedy: NITF payment of Rs.100,000 for deceased, Rs.2.5m for property damage

Mohamed Dilsad

Leave a Comment