Trending News

த.தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்த மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆனந்தசங்கரி

(UDHAYAM, COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்துடனும் மக்களுடனும் இணைந்து செயற்படுகிறது.

ஆனால் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் இணைந்து தம்மை பலப்படுத்தி வருகிறதே தவிர, மக்கள் நலன் குறித்து அக்கறைக் கொள்ளவில்லை.

சர்வதேசமும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக செயற்படுகிறது என்று ரீதியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த செயற்பாடுகளை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

පර්පෙචුවල් ට්‍රෙෂරීස් සමාගමෙහි ව්‍යාපාර කටයුතු අත්හිටුවීම දීර්ඝ කෙරේ.

Editor O

செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கும் அமைச்சர் மங்கள

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவற்துறை ஊடக பேச்சாளர் விடுத்துள்ள தகவல்…

Mohamed Dilsad

Leave a Comment