Trending News

தென்னிந்திய திரைப்படமொன்றை பார்த்து அதே போன்று கொள்ளையிட முயன்றவர் கைது

(UDHAYAM, COLOMBO) – தனது பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவித்து, திருமணத்திற்கு தேவையான பணத்தை தேடிக்கொள்ள முயன்ற நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் , மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சம்பவம் கைது செய்யப்பட்ட நபரால் திட்டமிடப்பட்டது என தெரியவந்துள்ளது.

இதன் போது , சந்தேகநபரிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபா காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , சந்தேகநபர் காவற்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் , தான் தனது திருமணத்திற்கு தேவையான பணத்தை தேடிக்கொள்வதற்காக தென்னிந்திய திரைப்படமொன்றில் இருந்தது போல இந்த திட்டத்தை மேற்கொண்டாத தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், பகமுன காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காணாமல் போனோர் தொடர்பான தெளிவான விபரங்கள் குறித்து பிரதமர் கருத்து

Mohamed Dilsad

கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்

Mohamed Dilsad

Fmr. Deraniyagala Pradeshiya Sabha Chairman sentenced to 24-years RI

Mohamed Dilsad

Leave a Comment