Trending News

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 704 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTV|COLOMBO) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரிகள் 704 பேருக்கு இன்று(25) முதல் எவ்வித அனுமதிகளும் இன்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்து குறித்த திணைக்களத்தினால் காட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு பெயர் பட்டியலினை வழங்கியுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கையானது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறித்த பெயர்கள் கணனிக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்திருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா தனது திணைக்களத்திற்கு அறிவிக்காது, நேற்று(24) பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணித்த WK 0065 என்ற விமானத்தின் ஊடாக தனது குடும்பத்தாருடன் சுவிட்சர்லாந்தின் சுரிவ் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ ස්වාධීන අපේක්ෂකයෙක් ලෙස ඇප මුදල් තැන්පත් කරයි.

Editor O

Kandy beat Havelocks to clinch Clifford Cup

Mohamed Dilsad

Leave a Comment