Trending News

அதிவேக வீதியின் மேலும் சில பகுதிகள் திறப்பு

(UTV|COLOMBO) – தெற்கு அதிவேக வீதியின் புதிய பகுதிகள் இன்று(07) திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மாத்தறை முதல் மத்தள வரையான பகுதியும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான சுமார் 40 கிலோ மீற்றர் கொண்ட பகுதியும் இன்று திறக்கப்படவுள்ளது.

கடவத்தையில் இருந்து கெரவலபிட்டிய வரை அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட பாதையும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெளிச்சுற்று வீதி திறக்கப்பட்டதன் பின்னர் கட்டுநாயக்கவிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக மாத்தறை வரை செல்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

GMOA to strike without prior warning if SAITM issue remains unsolved

Mohamed Dilsad

Top WTO experts in town for DoC’s export confab beginning today

Mohamed Dilsad

பரீட்சை ரத்து : அரசாங்க தகவல் திணைக்களம்

Mohamed Dilsad

Leave a Comment