Trending News

ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர்.

குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 9 மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதுடன், இன்று முதல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு முன்னதாக இவர்கள் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நீண்டகால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் மொத்தமாக 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். இவர்களுள் குறுகிய கால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள 30 பேர் எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

හිටපු ආගමන විගමන පාලක වරද පිළිගනී

Editor O

இரு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தந்தை செய்த காரியம்

Mohamed Dilsad

රටපුරා රෝහල්වල විශේෂඥ වෛද්‍ය හිඟය උග්‍රවෙයි…. : පිරිසක් රට හැර ගිහින්

Editor O

Leave a Comment