Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – நுவரெலிய, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணத்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி பணிமனை அறிவித்துள்ளது

நுவரெலிய மாவட்டத்தில் அம்பமுவ, கொத்மலை மற்றும் நுவரெலிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட அதிகார பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, குருவிட்ட, எஹெலியாகொட, எலபாத மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகத்தின் அதிகார பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்தில் புளத்கோபிட்டிய, தெரணியாகல, யட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலகங்களின் அதிகார பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

Le Pen criticizes Trump’s new found NATO stance

Mohamed Dilsad

பழவகைத் தோட்டங்களை உருவாக்கும் செயற்றிட்டம்

Mohamed Dilsad

பொதுநலவாய வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ரிஷாட் தலைமையில் 50 பேர் லண்டன் பயணம்…

Mohamed Dilsad

Leave a Comment