Trending News

நாளை 24 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO)  கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு நாளை காலை 09.00 மணிமுதல் மறுநாள் காலை 09.00 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதன்படி மகரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத் திட்டத்தின் கீழ் நீர் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

 

 

 

Related posts

நயன்தாராவின் குழந்தை ஆசை

Mohamed Dilsad

நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

Mohamed Dilsad

Nishikori injury sends Djokovic through

Mohamed Dilsad

Leave a Comment