Trending News

மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிய தென்அமெரிக்க நாடுகள்…

(UTV|SOUTH AMERICA) தென்அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய 2 நாடுகளும் திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கின.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ரயில்கள்  ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் உருவானது. மேலும் மின்வெட்டு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் தொடர்பும் முடங்கியது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக 2 நாடுகளிலும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பிரேசில் மற்றும் பராகுவேயின் சில பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.

பலமணி நேரங்களுக்கு பிறகு படிபடியாக மின்இணைப்பு சீரடைய தொடங்கியது. அர்ஜென்டினாவில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு 56 சதவீத மின்இணைப்பு திரும்ப கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் உருகுவேயிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான மின்இணைப்பு கிடைத்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

Related posts

டிரம்ப் – கிம் சந்திப்பு; முக்கிய ஆவணங்களில் கைச்சாத்து

Mohamed Dilsad

அவசரகால நீடிப்பு:பிரேரணை நிறைவேற்றம்

Mohamed Dilsad

சிரியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய துருக்கி தரைப்படை

Mohamed Dilsad

Leave a Comment