Trending News

3 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன போக்குவரத்து

(UTV|COLOMBO) கருவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிடி காவற்துறை நிலையங்களுக்கு உட்பட பிரதேசத்தின் சில வீதிகளில், இன்று (01)  தொடக்கம் 3 மாதங்களுக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய காலி வீதி கிலேன் ஆபர் பிரதேசம் கடல் வீதி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மழை நீர் செல்வதற்கான சுரங்கப்பாதை ஒன்றை அமைப்பதற்காக இவ்வாறான தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹெகே வீதி ஊடாக காலி நோக்கி பயணிக்க முடியும் என குறிப்பிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

மன்னார் காவல்துறை விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!!

Mohamed Dilsad

Special Cabinet meeting this evening

Mohamed Dilsad

තීරු බදු ප්‍රතිපත්තිය නැවත සලකා බලන ලෙස ලොව ප්‍රභලයෙක්ගෙන් ට්‍රම්ප් ට ඉල්ලීමක්

Editor O

Leave a Comment