Trending News

2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி

(UTV|COLOMBO) 2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களையும் அக்ரஹார காப்புறுதி திட்டத்திற்குள் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.திறைசேரி மற்றும் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சனத் ஜி டி சில்வா தெரிவித்தார்

அதன்மூலம் இந்த வருட இறுதிக்குள் 2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற சுமார் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அரச ஊழியர்கள் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்வர். வைத்தியசாலை செலவினங்களுக்கு மேலதிகமாக வைத்தியசாலையில் தங்கியிராமல் சிகிச்சை பெறும் செலவினங்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்

Mohamed Dilsad

ஜப்பான் மன்னரை இன்று சந்திக்கவுள்ள ஜனாதிபதி

Mohamed Dilsad

‘Bloemendhal Sanka’ further remanded

Mohamed Dilsad

Leave a Comment