Trending News

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

ஆப்பிரிக்க நாடான பெர்கினா பசோவிலுள்ள தேவலாயத்திற்கு விசமிகள் தீ வைத்தமையினால் அந்த தேவாலயத்தின் பாதிரியார் உட்பட 6 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

மேற்படி தாக்குதல்தாரிகளால், தேவாலயம் மற்றும் அதனை அண்மித்து காணப்பட்ட ஏனைய கட்டிடங்கள் எரியூட்டப்பட்டதாகவும், வைத்திய நிலையமொன்று கொள்ளையிடப்பட்டதாகவும், நகர மேயர் ஊஸ்மன் ஸொங்கோ தெரிவித்துள்ளார்.

குறித்த தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேர்கினோ பசோவில் கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Related posts

தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Mohamed Dilsad

சிறுவர் மீதான துன்புறுத்தல் அதிகரிப்பு

Mohamed Dilsad

சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment