Trending News

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

(UTV|COLOMBO)  சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கான எழுத்துமூல கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது நாட்டில் நிலவுகின்ற பிரச்சினை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதற்காக ஜனாதிபதியிடம் எழுத்துமூல கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

Police officer shoots himself

Mohamed Dilsad

Moroccan journalist Hajar Raissouni jailed on abortion charges

Mohamed Dilsad

බුද්ධි අංශයට ආණ්ඩුව කරන දේ ගැන උදය ගම්මන්පිලගෙන් ප්‍රකාශයක්

Editor O

Leave a Comment