Trending News

திருகோணமலையில் 7 மீனவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சோடர் பொயின்ட் என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட இவர்கள் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சோலையடி-1, ஜமாலியா-1, சல்லி மற்றும் சாம்ல்தீவு-3,தம்பலகமம் 1,வெள்ளைமணல்-1 போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களிடம் இருந்து 2 தடைசெய்யப்பட்ட வலைகளையும், 1படகையும் திருகோணமலை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று இரவு கடற்தொழில் திணைக்களமே அம்மீனவர்களை 50000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளது.

Related posts

புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகள் கொண்டு செல்வதற்கு தடை

Mohamed Dilsad

எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை

Mohamed Dilsad

மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை…

Mohamed Dilsad

Leave a Comment