Trending News

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று அங்கு முன்னிலையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் அவருக்கு கடந்த 8 ஆம் திகதி அறிக்கவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மற்றும் அதிகாரிகள் உட்பட்ட சிலர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துள குணவர்தன ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக புத்திக்க பத்திரன நியமனம்

Mohamed Dilsad

சபாநாயகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை [VIDEO]

Mohamed Dilsad

ஹிட்லர் வீடு பொலிஸ் நிலையமாக மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment