Trending News

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று(06) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

Related posts

மங்கள சமரவீரவின் அறிவித்தலை இரத்து செய்வதாக ஜனாதிபதி அறிவிப்பு

Mohamed Dilsad

Islamic delegation praises President’s views on religious harmony and peace

Mohamed Dilsad

ගුරු විදුහල්පති වැටුප් විෂමතාවට, අයවැයෙන් විසඳුමක් නොදීම ගැන, වෘත්තීය සමිති සමග සාකච්ඡා කර ක්‍රියාමාර්ගයක් ගන්නවා – ජෝසෆ් ස්ටාලිං

Editor O

Leave a Comment