Trending News

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றைய தினம் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் ஏனைய பிரதேசங்களில் விசேடமாக மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படுவதோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

“Do not vote for parties that only want to retain political power” – Minister Bathiudeen

Mohamed Dilsad

ஹிருணிகாவின் வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment