Trending News

போலி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடுபவர் கைது

(UTV|COLOMBO)-கல்னேவ, கலங்குட்டிய பிரதேசத்தில் போலி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சகம் ஒன்றில் போலி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் அச்சிடப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 42 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 08 வாகன வருமான வரிப்பத்திங்கள், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட போலி ஆவணங்கள் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்னேவ, கலங்குட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

Baby elephant fallen into well rescued

Mohamed Dilsad

Basketball changes rules on headgear to allow hijab

Mohamed Dilsad

A. L. A. Azeez appointed as Sri Lanka’s Permanent Representative to UN

Mohamed Dilsad

Leave a Comment