Trending News

அதிசிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்த லயனல் மெஸ்ஸி

லா லீகா கால்பந்தாட்டத்தொடரில் அதிசிறந்த வீரருக்கான விருதை, பார்சிலோனா கழக அணியின் நட்சத்திர வீரரான லயனல் மெஸ்ஸி (Lionel Messi) சுவீகரித்துள்ளார்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ஸ்பெய்ன் லா லீகா கால்பந்தாட்டத்தொடரில் அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களைக் கௌரவிக்கும் வருடாந்த விருது வழங்கல்விழா ​நேற்றிரவு பார்சிலோனாவில் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது.

தொடரில் அதிக கோல்களை போட்ட வீரருக்கான விருதை நட்சத்திர வீரரான லயனல் மெஸ்ஸி சுவீகரித்தார்.

அவர் இந்த விருதை வெற்றிகொள்ளும் ஐந்தாவது சந்தர்ப்பமாக இது பதிவானது.

இதனிடையே, லா லீகா கால்பந்தாட்டத்தொடரில் அதிசிறந்த வீரருக்கான விருதையும் லயனல் மெஸ்ஸி தனதாக்கிக் கொண்டார்.

கால்பந்தாட்ட அரங்கில் தன்னிகரற்ற வீரராக திகழும் லியனல் மெஸ்ஸி ஆர்ஜென்டின தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

லயனல் மெஸ்ஸி இளவயது முதலே பார்சிலோனா கழக அணிக்காக கழக மட்ட போட்டிகளில் விளையாடி வருகின்றமை இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

 

 

 

 

Related posts

Cyclone Gaja to move closer to Sri Lanka this evening – Met. Department

Mohamed Dilsad

வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம்-விசாரணை செய்ய 4 விஷேட பொலிஸ் குழுக்கள்

Mohamed Dilsad

தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment