Trending News

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும்

(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை கடந்த தினங்களில் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால், அனுராதபுரம் மாவட்டத்தின் நாச்சாதுவ, நுவரவௌ, கலாவௌ, ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் மஹகனதராவ ஆகிய நீர்நிலைகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதில் இருந்து வெளியாக்கப்படும் நீர், மல்வத்துஓய, கலாஓய மற்றும் கனதராஓய ஆகியவற்றின் ஊடாக பயணிக்கின்ற நிலையில், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த நதிகளை அண்டிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

“டீலா” என்று அழைக்கும் டக்லஸ் கைது

Mohamed Dilsad

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது

Mohamed Dilsad

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்

Mohamed Dilsad

Leave a Comment