Trending News

நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பிரிதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான நாலக சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட சிறைக் கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் Y – O பிரிவில் விஷேட கூடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அதிதிகளைப் பார்வையிடுவதற்கு, அங்கிருந்து பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக குறித்த சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

ஜேர்மனியில் நாளை சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சி ஆரம்பம்

Mohamed Dilsad

Former Minister Rishad and ACMC Parliamentarians lodges complaints against S. B. and Wimal

Mohamed Dilsad

Leave a Comment