Trending News

கடுகுருந்த படகு விபத்து!…உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்வு!

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை -கடுகுருந்த கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போயிருந்த 23 வயது பெண்ணின் உடல் பேருவளை மருதானை கடற்பரப்பில் இன்று மதியம் கரையொதுங்கியுள்ளது.

இன்று முற்பகல் பேருவளை கலங்கரை விளக்கம் அருகே அவரது கணவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , பின்னர் காணாமல் போயிருந்த ஏழு வயதுடைய சிறுவன் ஒருவரது உடல் பலபிடிய கடற்பரப்பில் கண்டிபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில், இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் காணாமல் போன சிறுமியொருவரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Australia to deport Sri Lankan asylum seeker

Mohamed Dilsad

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்

Mohamed Dilsad

83rd Battle of the Saints ends in yet another draw

Mohamed Dilsad

Leave a Comment