Trending News

கடுகுருந்த படகு விபத்து!…உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக உயர்வு!

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை -கடுகுருந்த கடலில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போயிருந்த 23 வயது பெண்ணின் உடல் பேருவளை மருதானை கடற்பரப்பில் இன்று மதியம் கரையொதுங்கியுள்ளது.

இன்று முற்பகல் பேருவளை கலங்கரை விளக்கம் அருகே அவரது கணவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , பின்னர் காணாமல் போயிருந்த ஏழு வயதுடைய சிறுவன் ஒருவரது உடல் பலபிடிய கடற்பரப்பில் கண்டிபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில், இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் காணாமல் போன சிறுமியொருவரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவர் ஒருவருக்கு கத்தி குத்து தாக்குதல்

Mohamed Dilsad

මෙරට මත්ද්‍රව්‍ය නිවාරණ වැඩපිළිවෙළට සීෂෙල්ස් සහය

Mohamed Dilsad

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனு நிராகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment