Trending News

மீன்பிடிக்கு சென்றவர் கடலில் விழுந்து மாயம்

(UTV|COLOMBO)-மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த படகில் இருந்த ஒருவர் கடல் அலையில் சிக்கி கடலில் விழுந்துள்ளார்.

பண்டாரவத்தை, பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போயுள்ள மீனவரை தேடும் பணியை பேருவளை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

New York Authorities examine Trump’s tax affairs

Mohamed Dilsad

(படங்கள்)-ஆசிய வலை பந்தாட்டப்போட்டி – சம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை

Mohamed Dilsad

Island wide dengue program in schools

Mohamed Dilsad

Leave a Comment