Trending News

குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அடித்து கொலை

(UTV|COLOMBO)-வென்னப்புவ, பொரலஸ்ஸ சந்தியில் நபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டர் சைக்கிள் ஒன்றை குத்தகைக்காக எடுத்துச் சென்ற ஒருவர், குத்தகை பணத்தை செலுத்தாததால் குறித்த மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து குறித்த அதிகாரியை இருவர் தாக்கியுள்ளனர்.

அச்சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அதிகாரியை லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் உல்ஹிட்டியாவ பகுதியை சேர்ந்த 46 வயதானவராவர்.

இக்கொலை சம்பவத்தில் தொடர்புபட்ட இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (30) மாரவில நீதவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

විසර්ජන පනත් කෙටුම්පත ගැසට් කරයි

Editor O

Court imposes international travel bans on DIG Nalaka de Silva, Namal Kumara [UPDATE]

Mohamed Dilsad

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பாத யாத்திரை?

Mohamed Dilsad

Leave a Comment