Trending News

தேயிலை தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியடைவதை நினைவுகூரும் வகையில் புதிய பத்து ரூபா நாணயம் வௌியீடு

(UDHAYAM, COLOMBO) – தேயிலைத் தொழில்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியை முற்றாக நீக்கி அதனை அபிவிருத்தி செய்வதன் தேவை குறித்து நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேயிலை தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியடைவதை இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செலாவணியை பெற்றுக் கொள்வதற்கு தேயிலைத்தொழில்துறை மிகவும் முக்கியமானதாகும்.

இந்த நிலையில், புதிய சந்தைகளை அடையாளம் காண்பது அத்தியாவசியமாகும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தேயிலை தொழில் துறைக்கு 150 வருடங்கள் பூர்த்தியடைவதை நினைவுகூரும் வகையில் புதிய பத்து ரூபா நாணயம் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

Woman arrested with heroin

Mohamed Dilsad

ஜனாதிபதித் தேர்தல்:15 மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்பு முடிவு

Mohamed Dilsad

சமூக ஊடக வலைதளங்களுக்கு புதிய சட்டமூல வரைபு

Mohamed Dilsad

Leave a Comment