Trending News

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

(UDHAYAM, COLOMBO) – கலடுவாவ மற்றும் லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் பாதையில் துன்மோதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக வக , களுஅக்கல , ஹங்வெல்ல , ஜல்தர , ரனால போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கடுவெல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Hizbullah appears before Presidential Commission

Mohamed Dilsad

Lennon and McCartney sons come together for selfie

Mohamed Dilsad

தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டு கொண்ட நபர்

Mohamed Dilsad

Leave a Comment