Trending News

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) – கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடக்கையின்போது தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் 80 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, குறித்த கடற்பிராந்தியத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், படகில் பயணித்த 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

மன்னார் – பேசாளை பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ශිෂ්‍යත්ව විභාගයේ කඩඉම් ලකුණු මෙන්න : සිසුන් 51,244 ක් කඩඉම පනී

Editor O

හපුතලේ ප්‍රාදේශීය සභාවේ මාලිමා මන්ත්‍රී, ස්වාධීන මන්ත්‍රී ට ගහලා…!

Editor O

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு-சபாநாயகர்

Mohamed Dilsad

Leave a Comment