Trending News

காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO ) – வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

Brie Larson joins Kaufman’s “Ending Things

Mohamed Dilsad

கோட்டாபய ராஜபக்ஷ தனது வாக்கினை சற்றுமுன்னர் பதிவு செய்தார்

Mohamed Dilsad

බන්ධනාගාර බස් රථයට එල්ල වූ ප්‍රහාරය සැළසුම් කළ ප්‍රධාන සැකකරු ඇතුළු පිරිස හඳුනා ගැනේ

Mohamed Dilsad

Leave a Comment