Trending News

காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO ) – வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

விஜயகலா மகேஸ்வரன் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டார்

Mohamed Dilsad

US and North Korea ‘negotiating a location’ for second summit, Trump reveals

Mohamed Dilsad

அமித் வீரசிங்கவுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

Mohamed Dilsad

Leave a Comment