Trending News

உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது நியூசிலாந்து

(UTVNEWS | COLOMBO) – 2019 உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அவுஸ்ரேலிய அணியை எதிர்கொண்டது.

இதன் போது 51:52 என்ற புள்ளி அடிப்படையில் நியூசிலாந்து அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. 16 நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டித்தொடர் இங்கிலாந்து லிவர்பூலில் இடம் பெற்றது.

இந்த போட்டியில் 3ஆம் இடத்திற்கு இங்கிலாந்து அணி தெரிவாகி உள்ளதுடன் இலங்கை அணிக்கு 15 ஆவது இடம் கிடைத்துள்ளது.

அடுத்த உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி தென் ஆபிரிக்காவில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

S. B. assumes duties as Chief Government Whip

Mohamed Dilsad

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

ළමයින්ට සමාජ මාධ්‍ය තහනම්

Editor O

Leave a Comment