Trending News

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(UTV|COLOMBO) சட்டவிரோத நிதி மூலம் கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 07 ம் திகதிக்கு ஒத்தி வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவையாளரான பாராளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்க உள்ளதால் இன்றைய விசாரணையை ஒத்திவைக்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தார்.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

Sri Lanka improves ranking in Human Development Index 2019

Mohamed Dilsad

எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

Mohamed Dilsad

2016 Olympic marathon champion fails drugs test

Mohamed Dilsad

Leave a Comment