Trending News

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.பெ இடையே ஏப்ரல் 10 மீளவும் பேச்சுவார்த்தை…

(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அலுவலகத்தில் இன்று(21) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இரு கட்சிகளுக்குமிடையில் அடுத்த கட்டப் பேச்சுவார்தை எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சி சார்பில் அதன் தலைவர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Related posts

மாத்தளையில் 75 வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Mohamed Dilsad

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்…

Mohamed Dilsad

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் -விற்பனை செய்யும் இடங்கள் இன்று(18) முதல் விசேட பரிசோதனைக்கு.

Mohamed Dilsad

Leave a Comment