Trending News

தங்காலையில் இன்று மற்றுமோர் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வீதித் தடையை மீறி பயணித்த வேன் வாகனமொன்று மீது காவற்துறையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை குடாவெல்ல சந்தியில் வைக்கப்பட்டிருந்த காவற்துறை வீதித் தடை ஊடாக பயணித்த வேன் வாகனத்தை நிறுத்துமாறு காவற்துறையினர் சமிஞ்சை அளித்துள்ளனர்.

எனினும் , குறித்த வேன் வாகனத்தின் சாரதி அதனை பொருட்படுத்தாது தப்பிச் செல்ல முற்பட்ட போது காவற்துறை அதிகாரியொருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் , வேன் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

வேன் வாகனத்தின் உரிமையாளரை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Liquor prices revised

Mohamed Dilsad

எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு

Mohamed Dilsad

எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீடு

Mohamed Dilsad

Leave a Comment