Trending News

ஈயினால் பரவும் தோல் நோய்…

(UTV|COLOMBO)-மத்திய மாகாணத்தில் சிறிய ஈயினால் பரவிவரும் தோல் நோய் தொடர்பில் அவதானம் செலுத்தமாறு மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லிஸ்மானிய என அழைக்கப்படும் இந்த நோய் சிறிய ஈயினால் பரவுவதுடன், ஈ கடித்த பின்னர் தோல் சிவப்பு நிறம் அடைந்து அரிப்பு ஏற்படும் என மருத்துவர் குறிப்பிடுகின்றார் .

இதேவேளை, ஒவ்வொரு வாரமும் புதிதாக ஆறு எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் கடந்த வருடமே எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

அதன் எண்ணிக்கை 285 ஆக பதிவாகியுள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரத்து 200 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

New Cabinet to be appointed tomorrow

Mohamed Dilsad

England to face New Zealand in Rugby World Cup Sevens final

Mohamed Dilsad

மக்களின் விருப்பத்துடனே அபிவிருத்தி

Mohamed Dilsad

Leave a Comment