Trending News

விஜயகலாவின் உரை தொடர்பான விசாரணைகள் நிறைவு

(UTV|COLOMBO)-விடுதலைப் புலிகளை மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்து அதுசம்பந்தமான அறிக்கை சட்ட மா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், சம்பவம் தொடர்பாக 59 வாக்குமூலங்கள் பதிவு செய்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு

Mohamed Dilsad

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

Mohamed Dilsad

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (UPDATE)

Mohamed Dilsad

Leave a Comment