Trending News

20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி

(UTV|NORTH KOREA)-அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார்.

இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

வருகிற 12-ந் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம்ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளனர்.

இது சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம்யாங் சோல் அமெரிக்கா சென்றுள்ளார்.

அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பேயை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி விருந்து அளித்தார்.

அமெரிக்கா- வட கொரியா மோதல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக வடகொரிய அதிகாரி யாரும் அமெரிக்கா சென்றதில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு கிம்யாங் சோல் அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Correction: ‘Moonlight’ wins best picture. ‘La La Land’ was read in error

Mohamed Dilsad

சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Mohamed Dilsad

RCB-யை கலாய்த்து சிவகார்த்திகேயன் எடுத்த படம்?

Mohamed Dilsad

Leave a Comment