Trending News

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

(UTVCOLOMBO)-மனித கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தங்காளை வீரகெட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காளை வலய விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இரண்டு கொலைகள் மற்றும் துப்பாக்கியை காட்டி தங்க மாலை மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ரண்ண பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Showery condition expected to enhance

Mohamed Dilsad

புல்வாமா தாக்குதல் – அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා – එංගලන්ත 20-20 තරඟය ඇරඹීමට වැස්ස බාධාකරයි

Editor O

Leave a Comment