Trending News

நாவலப்பிட்டியில் தீ இரண்டு குடியிருப்புகள் சேதம்

(UTV|COLOMBO)- நாவலப்பிட்ட நகரசபைக்கு சொந்தமான குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
நாவலப்பிட்டி  நகரசபை செய்சாகலை பகுதியிலே 02.04.2018 காலை 5.30 மணியளவில் தீ  குடியிருப்பில் பரவியுள்ளது
தீ பரவலையடுத்து விரைந்து செயற்பட்ட அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமாகியுள்ளதுடன் உடைமைகள் முழுவதும் தீயில் நாசமாகியுள்ளதுடன்  மேலும் ஒரு குடியிருப்பு பகுதியவில் சேதமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்
தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என்றும்  மின் ஒழுகே தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிவித்ததுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார்  தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்…

Mohamed Dilsad

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கரு ஜயசூரிய தயார் -டி சொய்சா

Mohamed Dilsad

England beat Costa Rica in final World Cup warm-up

Mohamed Dilsad

Leave a Comment