Trending News

சட்டவிரோத பொருட்களை கைப்பற்றுவது 30 வீதத்தினால் குறைவு

(UTV|COLOMBO) – 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றுவது 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளரான, மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பொருட்களை கைப்பற்றும் நடவடிக்கை மூலம், நாட்டின் வருமானத்திற்கு 599 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதுடன், அவற்றுள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 59 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனூடாக 375 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்

Mohamed Dilsad

Fmr. President’s Chief of Staff, ex-STC Chairman found guilty over bribery charges

Mohamed Dilsad

United States to fund Sri Lanka to counter human trafficking

Mohamed Dilsad

Leave a Comment