Trending News

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட ஆராய்சி பிரிவு

(UTV|COLOMBO) – டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சில் விசேட ஆராய்ச்சி பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது.

பாடசாலைகள் மற்றும் கட்டட நிர்மாண வளாகங்களில் டெங்கு நுளம்புகள் கூடுதலாக காணப்படுவதை கருத்திற் கொண்டு இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிருபங்களை வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் புனித பூமியாக பிரகடனம் [VIDEO]

Mohamed Dilsad

இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

Mohamed Dilsad

Sajith says he is ready to rebuild nation

Mohamed Dilsad

Leave a Comment