Trending News

அரச செலவீனங்களுக்கு ரூ.1,474 பில்லியனை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1,474 பில்லியன் ரூபாவை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

குறித்த தொகைக்கு மேலதிகமாக அரசாங்கத்தின் சார்பில் திரட்டப்படவேண்டிய கடன் தொகை 721 பில்லியன் ரூபாவை விஞ்ஞாததாக இருப்பதற்கும் பாராளுமன்றத்தின் அனுமதி நிதி அமைச்சரினால் கோரப்பட்டது.

இதனை அடுத்து மக்கள் விடுதலை முன்னணி மாத்திரம் தமது எதிர்ப்பை முன்வைத்த நிலையில் வாக்கெடுப்பு இல்லாது கணக்கு வாக்கெடுப்பு சபையில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Michel Salgado optimistic of Cristiano Ronaldo staying at Real Madrid

Mohamed Dilsad

කින්නියා අධ්‍යාපන කොට්ඨාශයේ සියලුම පාසල් වසා දැමේ

Mohamed Dilsad

New Sri Lanka Map to be launched tomorrow

Mohamed Dilsad

Leave a Comment