Trending News

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்றுடன் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இன்று(06) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் கட்டுப் பணத்தை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 5ஆம் திகதி மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16 வேட்பாளர்களும் சுயாதீனமாக 14 பேரும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளை (07) முன்னெடுக்கப்படவுள்ளதுடன், காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான 2 மணித்தியால காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

யாழில் பாரிய தீ விபத்து; திடிரென தீ பற்றிய வாகனங்கள்

Mohamed Dilsad

வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் பெருமளவில் மீன்கள்

Mohamed Dilsad

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி

Mohamed Dilsad

Leave a Comment