Trending News

நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை

(UTVNEWS | COLOMBO) – எவன்காட் நிறுவனத்தின் தலைவா் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேரும் இந்த மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் இன்று(12) அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபா் தப்புலடி லிவேராவினால் 7,573 குற்றச்சாட்டுக்களின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சட்டமா அதிபரால் நிரந்தர நீதாய மேல்நீதின்றில் நேற்று முன்தினம்(10) தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ යටතේ හඳුන්වා දීමට නියමිත මොඩියුල පිටපත්, රජයේ නිල ප්‍රකාශනයටත් පෙර පෞද්ගලික වෙළෙසැල්වල විකුණන්න දාලා

Editor O

Rajarata university medical faculty’s dean and 14 division heads resigned

Mohamed Dilsad

இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது

Mohamed Dilsad

Leave a Comment