Trending News

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக விஷேட பொலிஸ் செயற்பாட்டு பிரிவு

(UTVNEWS | COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக விஷேட பொலிஸ் செயற்பாட்டு பிரிவை அமைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு 47 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

குறித்த மத்திய நிலையங்கள் எல்பிட்டிய, பிட்டிகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமையவுள்ளது. பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் தேர்தல் முடியும் வரையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்த பொலிஸ் செயற்பாட்டு பிரிவு செயற்படுமென்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

බංගලාදේශය යළි ඇවිලේ ; තැන තැන ප්‍රචණ්ඩ ක්‍රියා ඉහළට

Editor O

டொரிங்டன் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்

Mohamed Dilsad

Showery condition expected to enhance – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment