Trending News

யாழ் மாநகர மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UTVNEWS|COLOMBO) – யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(07) நாட்டி வைத்தார்.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா யாழ்.மாநகர முதல்வர் இ . ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த . சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Related posts

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு

Mohamed Dilsad

රාජ්‍ය සේවකයන්ගේ වැටුප් රු 20,000 කින් වැඩි කළොත්, එය ගෙවීමට වසරකට රු. බිලියන 275ක් අවශ්‍යයි.

Editor O

இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணி

Mohamed Dilsad

Leave a Comment