Trending News

மீண்டும் ஐ.தே.க மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி: எதற்காக? இந்த திடீர் மாற்றம்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையுடன் நேற்று கேட்டறிந்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சிறுபான்மையின அமைச்சர் ஒருவருடன் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவ்வாறான எந்த இணக்கமும் இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

රේන්ජ් රෝවර් වාහන 150ක් ගෙන්වීම සඳහා ඇණවුම්

Editor O

கிழக்கில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் வெற்றியே வடக்கிலும், தெற்கிலும் அவர்களை தலை நிமிர்ந்து வாழவைக்கும் – மட்டுவில் அமைச்சர் ரிஷாட்

Mohamed Dilsad

பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

Mohamed Dilsad

Leave a Comment