Trending News

அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் (குறிப்பாக மே 29ஆம், 30ஆம் திகதிகளில்) சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

Mohamed Dilsad

Kelaniya bags men’s title, Moratuwa women’s champs

Mohamed Dilsad

நானுஓயாவில் கனரக வாகனத்தில் மோதுண்ட சிறுமி ஸ்தலத்தில் பலி கனரக வாகனத்திற்கு தீ வைப்பு – [PHOTOS]

Mohamed Dilsad

Leave a Comment